நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!
[2025-12-29 19:13:56]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[2025-12-28 19:44:19]
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழில் முற்றுகையிடப்பட்ட விடுதி: ஆறு பெண்கள் உற்பட 8 பேர் கைது
[2025-12-28 19:13:27]
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இறு விடுதிகளை முற்றுகையிடப்பட்ட பொலிஸார் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பெண்கள் உற்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொடர் சோதனை: 133 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!
[2025-12-27 22:00:11]
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளின் போது 133 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை இலங்கை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நத்தார் தின விசேட பொது மன்னிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு:
[2025-12-27 21:38:11]
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் பெண் உட்பட நால்வர் போதைப்பொருளுடன் கைது..!
[2025-12-27 21:28:57]
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் இன்று (27) கைது செய்யப்பட்டனர்.
அதிரடியாக அதிகரிக்கும் தங்க விலை..!
[2025-12-27 21:10:02]
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது.
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பிரதான நத்தார் திருப்பலி:
[2025-12-25 18:16:35]
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி, யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மிகவும் பக்திப்பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஆராதனையில் பெருந்திரளான கத்தோலிக்க மக்கள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை பேருந்து விபத்து.! 14 பயணிகள் படுகாயம்!!
[2025-12-25 17:50:20]
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
இவ்வாண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.5 லட்சத்தைத் தாண்டியது!
[2025-12-25 17:34:32]
இவ்வருடம் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 லட்சத்து 50,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை தொடர அமைச்சரவை அங்கீகாரம்:
[2025-12-24 13:40:49]
சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின் அலங்காரங்களுடன் ஜொலிக்கு யாழ். மணிக்கூட்டு கோபுரம்..! திறந்து வைத்த ஆளுநர்:
[2025-12-24 13:18:26]
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான மணிக்கூட்டு கோபுரம், நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நேற்று இரவு கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறையில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை:
[2025-12-24 12:58:55]
வடமராட்சி - பருத்தித்துறை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் பல மாகாணங்களில் காற்றின் தரம் கடும் வீழ்ச்சி! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
[2025-12-23 19:43:18]
இலங்கையின் வளிமண்டலத்தில் காற்றின் தரம் தற்போது கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு - காங்கேசன்துறை ‘யாழ் தேவி’ புகையிரதம் நாளை முதல் சேவையில்!
[2025-12-23 19:29:16]
கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான யாழ் தேவி புகையிரதம் நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் அதிரடி நடவடிக்கை! பொலித்தீன் பாவனை முற்றாக தடை!!
[2025-12-23 19:20:50]
உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் எதிர்வரும் 01.01.2026 திகதி முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும், அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது!
[2025-12-23 19:09:13]
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.









