யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய வீதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
[2026-06-01 23:04:11]
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றைய திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.
யாழில் தீவுகளுக்கான பயணிகள் படகு சேவை நேரத்தில் மாற்றம்.
[2026-06-01 22:53:10]
ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
யாழில் பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் கொலை..!
[2026-06-01 22:48:16]
யாழ்ப்பாணத்தில் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்......
அரச அலுவலகங்களில் இன்று முதல் இதை பயன்படுத்த தடையாம்
[2026-05-31 22:48:10]
இன்று முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் , ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் வெசாக் கொண்டாட்டம்
[2026-05-31 22:43:11]
யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
யாழில் அசம்பாவிதம்: ஒரே இரவில் 2 கொள்ளைச் சம்பவங்கள்..!
[2026-05-31 22:27:41]
சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையடிகப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை
[2026-05-30 23:06:58]
கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சைபர் அச்சுறுத்தல்களை நம்ப வேண்டாம்: பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்..!
[2026-05-30 23:02:44]
போக்குவரத்து குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தவுள்ளதாக தெரிவித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களுக்கு ஏமாற வேண்டாமென பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பெருமளவு வெளிநாட்டு சிகரட்டுடன் 18 பேர் கைது!
[2026-05-30 23:00:53]
சட்டவிரோதமான முறையில் 31,380,000 பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
யாழில் கடலுக்கு சென்றவர்கள் மாயம் - 20க்கும் மேற்பட்ட படகுகள் தேடுதலில்...!
[2026-05-29 12:07:11]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்...!
[2026-05-29 11:46:41]
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் .....
வெசாக் தினத்தை முன்னிட்டு மே 31 அரசாங்க விடுமுறையாக அறிவிப்பு
[2026-05-28 22:27:14]
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதி
[2026-05-28 22:25:53]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[2026-05-28 22:24:36]
'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு...!
[2026-05-27 22:45:17]
நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை தொடர்பில் அறிவிப்பு...!
[2026-05-27 22:11:50]
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது போதுமான அளவில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
வித்யா கொலைக் குற்றவாளியின் இறுதி கிரியை குறித்து வெளியாகிய தகவல்...!
[2026-05-26 11:31:46]
யாழ். சிறைச்சாலையில் நேற்றை தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









