யாழில் அசம்பாவிதம்: ஒரே இரவில் 2 கொள்ளைச் சம்பவங்கள்..!
[2026-05-31 22:27:41] Views:[77]
யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மற்றும் உடுப்பிட்டி ஆகிய வெவ்வேறு பகுதிகளிள் உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து நுழைந்த திருடர்கள், ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவங்கள் முழு யாழ்ப்பாணத்தையுமே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது .
திருடர்கள் வீட்டின் சமையலறைப் பக்கக் கதவு அல்லது ஜன்னல் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து, இப்பணத்தைக் களவாடிச் சென்றுள்ளனர்.
நேற்றையதினம் சீட்டுப் பணம் கொடுப்பதற்காக, வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையடிகப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட உரிமையாளர்கல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து.போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளையர்களைக் கண்டறிய மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவிகளைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக கூறப்படுகிறது.










