வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு சம்பவம் - துண்டாகிய பெண்ணின் விரல்கள்..!!
[2026-05-03 23:24:43] Views:[83]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏற்கனவே அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை முடிந்து வந்தவேளை அவரை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியை குறித்த இளைஞன் பறித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது மனைவிக்கு கூறிய நிலையில் மனைவி குறித்த இளைஞனுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதன்போது குறித்த இளைஞன் அந்த பெண் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக கூறப்படுகிறது.










