ஆபத்தான பொருள் பொருட்களுடன் யாழ்ப்பாணத்தில் நபரொருவர் கைது..!!
[2026-04-28 22:01:31] Views:[94]
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










