யாழ்ப்பாணத்தில் கத்தி குத்து: சந்தேக நபர் கைது..!!
[2026-04-28 21:57:06] Views:[109]
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் நேற்றைய கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் - தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பெண்ணொருவரும் அவரது சகோதரனும் வழக்கு ஒன்று தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகிவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதன்போது இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்நிலையில் சந்தேகநபரான கணவனை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளதாங்க கூறப்படுகிறது.










