யாழில் அடுத்தடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள்....!!!
[2026-04-22 18:59:32] Views:[118]
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெட்டுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், பொதியை மீட்டு சோதனை செய்ததில் அதற்குள் 05 கிலோகிராம் கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது.
அதே போன்று கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதிகளை மீட்டு சோதனையிட்டனர். அதன் போது பொதிக்குள் சுமார் 09 கிலோ கிராம் கஞ்சா காணப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










