நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்
[2026-04-02 14:51:22] Views:[71]
நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மீனவ சமூகம் முகம் கொடுக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர், கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.










