நெடுந்தீவு கடற்பரப்பில் 7 இந்திய மீனவர்கள் கைது..!
[2026-03-26 12:43:05] Views:[251]
யாழ்ப்பாணம் கடல் எல்லைக்குள் அத்துமீறி உட்பிரவேசித்த இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவுக்கு வடக்கே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் 02 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.










