பாரியளவு போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 09 நபர்கள் அதிரடி கைது..!!
[2026-03-13 11:44:20] Views:[19]
நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த படகுகளில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ரி56 ரக துப்பாக்கிகள் 2, பிஸ்டல் ரக கைத்துப்பாக்கிகள் 8 மற்றும் M16-2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.










