யாழில் கத்தி முனையில் 5 பவுன் நகை திருட்டு..!!
[2026-03-09 11:00:44] Views:[17]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்த பெண்ணிடம் கத்தி முனையில் 5 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுன் நகையை கழுத்திலிருந்து அறுத்து எடுத்தனர்.
பின்னர் குறித்த பெண்ணையும் தாக்கியுள்ளனர்.
இதில் கணவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.










