யாழில் படகு விபத்து: நீரில் மூழ்கிய பலர்..!!
[2026-03-06 19:20:41] Views:[12]
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியை சேர்ந்த 80 வயதான எம்.ஜோசப் மற்றும் 57வயதான பிரான்ஸிஸ் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள், 8 ஆண்கள் என 13 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றதக கூறப்படுகிறது.










