யாழில் அடுத்தடுத்தாக கைதாகிய 10 நபர்கள்..!
[2026-03-06 11:43:39] Views:[14]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பலர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் கசிப்பு, கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.










