மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானசேவைகள் ரத்து
[2026-03-03 11:26:10] Views:[16]
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் பயணிகளுக்காக விசேட சலுகைகள் குறித்த அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்பைக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2026 பெப்ரவரி 28 முதல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் தற்போதைய விசா காலாவதியாகும் திகதியிலிருந்து இந்த 14 நாட்கள் சலுகைக்காலம் நடைமுறைக்கு வரும்.
இந்தப் பிரத்யேக விசா நீடிப்பைப் பயணிகள் விமான நிலையத்திலுள்ள குடிவரவு அலுவலகத்தில் வெளியேறும்போது பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஆதாரமாக விமான ரத்து அறிவிப்பு, போர்டிங் பாஸ் (Boarding pass) அல்லது சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும் என கூறப்படுகிறது.










