இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கை; கேரள கஞ்சா உற்பட பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!
[2026-01-15 21:03:56] Views:[19]
வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் நேற்று (14) புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா உட்பட பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து குறத்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 14 கிலோ எடையுடைய ஒன்பது பொதிகள் அடங்கிய கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 24 சிரிய பாக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பதின் போது சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.










