மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி இல்லை!
[2026-01-15 20:46:11] Views:[16]
மின் கட்டணங்களில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், மேற்படி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 11.57 வீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.










