அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி :
[2026-01-14 13:07:54] Views:[16]
அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தாபன விதிக்கோவையின் தொடர்புடைய விதிகளைத் திருத்துவதற்கும், இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான தாபன விதிக்கோவையின் விதிகளின்படி, தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) தற்போது ஒரு அதிகாரி ரூ.10,000 முன்பணத்தைப் பெற முடியும்.
வட்டி இல்லாமல் 08 மாதகாள தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










