கிளிநொச்சியில் கோர விபத்து: நால்வர் பலி..!
[2026-01-13 11:51:14] Views:[14]
கிளிநொச்சி -A35 வீதியில் நேற்றைய தினம் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேற்படி விபத்தில் காயமடைந்த 05 நபர்கள்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சைபெற்று வந்த ஐவரில் நால்வர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளதாகக கூறப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.










