இன்று GIT பரீட்சை – நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள்
[2026-01-11 21:31:05] Views:[12]
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இன்று நடைபெற்றது
இந்த பரீட்சையில் ஒரு இலட்சத்து தொண்ணூற்று எண்ணாயிரத்து முன்னூற்று மூன்று (198303) மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
குறித்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய 10 பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) ஆரம்பமாகவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் வரும் 20-ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.










