நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம்..!
[2026-01-08 21:14:20] Views:[13]
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகியவற்றுக்கு இடையில் இலங்கைக் கரையை ஊடறுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250 கி.மீ தொலைவில் இந்த தொகுதி நிலை கொண்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.










