வடக்கில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை அதிகரிக்க வேண்டும் - ஆளுநர் தெரிவிப்பு!
[2026-01-06 14:51:32] Views:[13]
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை நேற்றைய தினம் மாலை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, ரஷ்யச் சுற்றுலாவிகளின் வருகையை வடக்கு பகுதியில் அதிகரிக்க உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார்.










