ஹெலிகாப்டர் மூலம் பெண்ணொருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி..!
[2026-01-06 14:45:28] Views:[15]
நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்றையதினம் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் இலங்கை விமான படைக்கு தெரிவிக்கப்பட்டதின் பின் விரைந்து செயட்பட்ட விமானப்படையினர் அவரை விமானம் மூலமாக பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
குறித்த பெண் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.










