இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 11 இந்திய மீனவர்கள் கைது!
[2026-01-02 13:10:31] Views:[13]
யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினமான நேற்று (01) இரவு ஒரு விசைப்படகில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்களே கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையி போது கைது செய்யப்பட்டனர்.
மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.










