வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு:
[2026-01-01 21:10:04] Views:[12]
ஊழலற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் நேய அரச சேவையை வழங்க முன்வாருங்கள்: வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியையும், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணக் கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.










