நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது!
[2025-12-30 12:26:47] Views:[20]
இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (30) அதிகாலை சங்கிலியன் பூங்கா அருகில் வைத்து 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த நபர் பிரதேச சபை உறுப்பினர் என்பதுடன், அவருக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தங்களுக்கு அமைய போதைப்பொருளை கைமாற்றப்படுவது விசாரணையில் தெரிவித்துள்ளது.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.










