நண்பர்களுடன் கடலில் குளித்த இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!
[2025-12-29 19:13:56] Views:[14]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே மேற்படி காணாமல் போனவராவார்.
நேற்று (28) பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.
கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
குறித்த இளைஞனுடன் நீராடிய இரு இளைஞர்களிடம் மருதங்கேணி பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளறனர்.










