திருகோணமலை பேருந்து விபத்து.! 14 பயணிகள் படுகாயம்!!
[2025-12-25 17:50:20] Views:[15]
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹிந்தபுர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பயணிகள் காயமடைந்தனர்.
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மஹிந்தபுர சந்திக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 21 பயணிகள் பயணித்துள்ளனர்.
அவர்களில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சேருநுவர மற்றும் மூதூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த சேருநுவர பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










