பருத்தித்துறையில் கரையொதுங்கிய சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை:
[2025-12-24 12:58:55] Views:[14]
வடமராட்சி - பருத்தித்துறை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (24) காலை பருத்தித்துறை - இன்பர்சிட்டி பகுதியில் அடையாளம் தெரியாத குறித்த சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
நீல நிற காற்சட்டை மற்றும் பட்டர் நிற ரி-சேர்ட் அணிந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலமானது மீனவர் ஒருவருடையதாக இருக்ககூடும் என சடலத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










