கொழும்பு - காங்கேசன்துறை ‘யாழ் தேவி’ புகையிரதம் நாளை முதல் சேவையில்!
[2025-12-23 19:29:16] Views:[15]
கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான யாழ் தேவி புகையிரதம் நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய யாழ் தேவி புகையிரதம் சேவை நாளை முதல் கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே வடக்கு தொடருந்து வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
யாழ் தேவி புகையிரதம் சேவை குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும், பயணிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் வழங்கப்படும் என்றும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.










