வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த பலகோடி ரூபாய் பெறுமதியான பொருள் மீட்பு...!!
[2025-12-22 19:48:06] Views:[14]
32 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் செங்டு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக நேற்று இரவு 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இருவரும், அவர்களின் உடலுக்குள்ளும் அவர்களின் பொதிகளிலும் இரத்தினக் கற்களை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இரத்தினக் கற்களில், Blue Shaperar, Padmaracha, Spinel, Ruby, Crysobery, Tsavorite Garnet, Cats Eye Moonstone, Tourmaline மற்றும் Star Shaperar போன்ற முக்கிய இரத்தின வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 இரத்தினக் கற்கள் இருந்ததாக கூறப்படுகிறது.










