மீட்பு பணியில் கிடைத்த பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்.
[2025-12-18 19:20:42] Views:[12]
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின்போது, இலங்கை இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைந்து அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள், தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது










