இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா இந்தியாவில் பறிமுதல்...!
[2025-12-15 19:29:40] Views:[13]
இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபா மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளிமுனை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து பொலிசார் தீவிரமாக தேடினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக 150 கிலோ கஞ்சா சாக்கு மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










