75வது இலங்கை கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு.
[2025-12-12 19:36:25] Views:[10]
இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக கடந்த 07 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளியில் மருத்துவ மனையிலும் 10 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் நிபுணவின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அதேபோல், கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிபுண நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு, காலி, கராப்பிட்டி தேசிய மருத்துவமனையின் இரத்த வங்கியுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் தெற்கு கடற்படையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் குருதிக்கொடைய அளித்தமை குறிப்பிடத்தாக்கது.










