யாழில் தீ விபத்தினால் ஆசிரியை உயிரிழப்பு..!!
[2025-12-11 14:47:36] Views:[10]
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
43 வயதான ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண்மணி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










