இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு..!
[2025-12-10 14:54:51] Views:[9]
யாழ். மாவட்டத்தில் அனர்த்தம் கரணமாக மக்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக இடைத்தங்கல் முகாம்களை இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலக இணைப்பாளர் டி.கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
சாவகச்சேரி பகுதியில் ஆறு இடைத்தங்கல் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கு வாழுகின்ற மக்களின் உணவு மற்றும் சுகாதார மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.










