தமிழ்நாட்டிலிருந்து பாரிய அளவிலான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு....
[2025-12-07 19:38:41] Views:[10]
டிட்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் 950 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இந்தக் கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் இந்த உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் கணேஷ்நாதன் கீதீஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அமைச்சர் விஜித ஹேரத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.










