யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதமாக்கிய இந்திய மீனவர்கள்..!!
[2025-12-06 20:50:47] Views:[10]
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் அண்மைக்காலமாக இந்திய இழுவைமடி படகுகளின் வரத்து அதிகரித்துள்ளது. சீரற்ற காலநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மை நாட்களாக வடமராட்சி கிழக்கு பகுதியிலும் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதாங்க கூறப்படுகிறது.
இதனால் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய இழுவை மடிப் படகுகள் எமது வளத்தை அழித்துச் செல்வதாகவும். வடமராட்சி கிழக்கு பகுதி மீனவர்களின் வலைகள் இந்திய இழுவைமடி படகுகளால் நாசமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்ககல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.










