2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[2025-12-02 14:43:15] Views:[13]
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பயண சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பருவச் சீட்டுக்களை வாங்குகின்றனர் என்பதும் கவனத்திட்கு கொண்டுவரப்பட்டுள்ளது .
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2025 நவம்பர் மாதத்திற்கு செல்லுபடியாகும் மாதாந்திர மற்றும் காலாண்டு பருவச் சீட்டுக்களை 2025.12.07 வரை பயன்படுத்தா முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது
வாராந்திர பருவச் சீட்டுக்களுக்கு இது செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.










