உயர்தரப் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு..!
[2025-12-02 14:34:37] Views:[10]
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.
தற்போதைய நாட்டின் சூழ்நிலை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக இது தொடர்பான முந்தைய அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று தேர்வுகள் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு, பரீட்சைகள் தொடர்பான ஏராளமான விசாரணைகள் வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










