இலங்கையை வந்தடைந்த இந்திய விமானப்படையின் மற்றொரு விமானம்!
[2025-12-01 19:05:32] Views:[13]
இந்திய விமானப்படையின் C-130J ரகத்தைச் சேர்ந்த மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான சீரற்ற வானிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்திட்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் சுமார் பத்து டன் எடையுள்ள அனர்த்த நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஒபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில் இலங்கையின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் தனது உதவிகளை தொடர்ந்து இந்தியா வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.










