இலங்கையை வந்தடைந்த இந்திய மீட்பு குழுவினர்..!
[2025-11-29 14:23:00] Views:[12]
இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










