வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் படுகாயம்..!!
[2025-11-28 13:06:16] Views:[14]
அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்துள்ளனர். தாக்குதலின்போது அந்த நபரும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.










