அபார வெற்றி பெற்ற இலங்கை: மண்ணைக் கவ்வியது ஜிம்பாப்வே.
[2025-11-26 19:29:56] Views:[12]
பாகிஸ்தான் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
ஆனால், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாட இலங்கை தகுதிபெறுவதாக இருந்தால் எஞ்சியுள்ள பாகிஸ்தானுடனான இரண்டாம் கட்டப் போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டும்.
பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது.
நேற்றைய போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 16.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.










