வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்த்தான் விசேட எதிர்வுகூறல்..!
[2025-11-25 20:27:47] Views:[12]
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியுள்ளது.
இதனால் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே மோசமான வானிலை காணப்படுவதால் மக்களை பாதுகாப்பான யுக்திகளை கையாளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.










