வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள்: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.
[2025-11-25 19:47:48] Views:[12]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்தாண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
இந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.










