யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!!
[2025-11-23 19:08:58] Views:[15]
யாழில், கடல் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் இறங்கியவேளை அலை இழுத்து சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளவாலை - தும்பளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள கடல் அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்றுள்ளார். குறித்த இளைஞன் கடலில் இறங்கி சிறிது தூரம் சென்ற நிலையில் அவரை அலை இழுத்து சென்றுள்ளது.
பின்னர் ஊர்மக்கள் இணைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை அவரது சடலம் அட்டை பண்ணைக்கு அருகாமையில் மிதந்தவாறு காணப்பட்டது. அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.










