யாழில் விஸ்வரூபம் எடுக்கும் டெங்கு; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
[2025-11-23 18:58:44] Views:[13]
யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்த்துளளார்.
கடந்த சில ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயின் புள்ளிவிபரங்கள் .
2024 இல் 5000 பேரும்,
2023 இல் 3986 பேரும்,
2022 இல் 3406 பேரும்,
2021 இல் 310 பேருமாக நோயாளர்கள் அடையளம் காணப்பட்டிருந்தனர்.
கடந்த இரு வாரங்களில், காலநிலை மாற்றம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மாவட்டத்தின் அபாய மட்டத்தை கடந்துள்ளது.இது தொடருமானால் பாரிய சவாலை யாழ் மாவட்டம் எதிர் நோக்க நேரிடும்.
அதனால் துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள், அரச நிறுவனங்கள், என அனைத்து இடங்களிலும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் சுகாதார சேவைகள் பணியகம் வழங்கும் எனவும் சுகாதார சேவைகள் பணிபாளர் ஆர்.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.










