தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!
[2025-11-21 13:36:11] Views:[13]
இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி, கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தில் நேற்று (20) இரவு இடம்பெற்ற குறித்த சம்வத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.
அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்ததாகவும், அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










