நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி மீட்பு!
[2025-11-16 13:52:13] Views:[13]
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் வெற்றுக்காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்குரிய மகசீன் என்பன நேற்று (15) மீட்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு, 09ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாவனையற்று பற்றைக்காடாக காணப்படும் காணி ஒன்றில் துப்பாக்கி ஒன்று மகசீனுடன் காணப்படுவதாக நேற்று முன்தினம் (14) ஊர்காவற்றுறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறத்த துப்பாக்கியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசீன் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் துப்பாக்கியை நீதிமன்றில் பாரப்படுத்தி , நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.










