கரவெட்டி பகுதியில் நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
[2025-11-11 16:07:38] Views:[19]
துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த அருண்நேரு அஸ்வந் என்ற நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார் எனவும் சம்பவம் குறித்து நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










